நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் தான் சுக்கிரன். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு ஆகியவற்றின் அதிபதியாக திகழ்கின்றார்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசியில் சுக்கிரம் உச்சம் பெற்றால் சகல விதமான சுகங்களையும் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில் சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக உருவாகும் மாளவ்ய யோகம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே பணத்துக்கு பஞ்சமின்றி ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.
2025 ஆம் ஆண்டில் உருவாகவுள்ள மாளவ்ய யோகத்தின் முழுப் பலன்களையும் இவர்கள் பெறப்போகிறார்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உருவாகும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வை அடுத்த ஆண்டில் இவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு மாளவ்ய யோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் செல்வாக்கு வாழ்வில் பாரிய மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.
2025 ஆம் ஆண்டு முழுவதுமே இவர்களுக்கு பணவரவு மிகவும் சீராக இருக்கும். சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் கூடிவரும்.
மகரம்
மகர ராசியினருக்கு இந்த மாளவ்ய ராஜயோகத்தால் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு அமையும். தொழில் மற்றும் நிதி ரீதியில் அருசு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையும்.
கடந்த காலங்களில் செய்த முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். பணவியத்தில் எதிர்பாத அளவுக்கு வளர்ச்சி ஏற்படும்.