
சனி மிகவும் முக்கியமான கிரங்களின் ஒன்றாகும். மேலும் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பார். இதனல் தான் சனியை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். அதுமட்டுமின்றி சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார்.
ஏனெனில் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செய்ய இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளும். ஆகையால் அவரது தாக்கம் அனைத்து ராசிகளிலும் மிக நீண்ட காலம் இருக்கும்.
இந்நிலையில் சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ரப் பெயர்ச்சி , வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. அந்த வகையில் சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசியில் நிகழ உள்ளது.
ஜூன் 30 முதல், சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. மேலும் நவம்பர் 15 ஆம் தேதி வரை அவர் வக்ர நிலையில் இருப்பார். எனவே சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பண வரவு அதிகமாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.
துலாம்:
சனி வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்து வரும் 5 மாதங்களுக்கு சாதகமான பலனைத் தரும். சனியின் தாக்கத்தால் பல காரியங்களில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பதவி, கௌரவம் உயரும். நிதி விஷயங்களில், நீங்கள் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் நீங்கள் பல புதிய முதலீட்டு விருப்பங்களைப் பெறலாம்.
கன்னி :
கும்ப ராசியில் சனியின் வக்ரபெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம். உங்கள் வாழ்க்கையில் நல்ல பலனை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். எனவே உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். நிதி நிலையும் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்:
கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடுத்த 5 மாதங்களுக்கு விருச்சிக ராசியினருக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் பல நல்ல முதலீடுகளைக் காணலாம். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உங்கள் தொழில் வாழ்க்கையில் பல பணிகளைப் பெறலாம், இது உங்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.