
பூண்டுக்கு பல நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த பூண்டு நோய்களுக்கான சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் பூண்டு சாப்பிட சரியான வழி தெரியும். ஆனால் தற்போது இது தொடர்பான சரியான புரிதல் இல்லாததால், தவறான முறையில் மக்கள் இதை உட்கொள்கின்றனர். இந்நிலையில் சரியான முறையில் பூண்டு எப்படி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பூண்டில் இருக்கும் சத்துக்கள் :
பூண்டில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் உள்ளது. அதுமட்டுமின்றி செலினியம், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
ஆரோக்கியத்திற்கு பூண்டு :
* சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்.
* இத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
* பூண்டில் அலிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
* இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும்.
* இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு நன்மை பயக்கும்.
* நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.
பூண்டு சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை :
* தினம் 1 பச்சை பூண்டு சாப்பிடுங்கள் : தினமும் 1 பல் பச்சை பூண்டை சாப்பிட்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற இது சிறந்த வழியாகும்.
* உணவில் பூண்டை சேர்க்கவும்:
பொதுவான உணவை சமைக்கும் போது அதில் பூண்டை சேர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பூண்டு பயன்படுத்தப்பட்டால். அதேபோல் இறைச்சி அல்லது டோஃபு போன்ற உணவுகளில் கட்டாயம் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.
* பூண்டு பொடியை பயன்படுத்தலாம்:
பூண்டு பொடியை பல வழிகளிலும் நாம் பயன்படுத்தலாம். பாஸ்தா, சூப் மற்றும் பிற உணவுகளில் 1 பூண்டை தூள் செய்து சாப்பிடவும்.
* பூண்டு டீ :
பூண்டை டீயாக செய்து எடுத்துக் கொள்வது அதன் கடுமையான வாசனையைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும். நான்கு பூண்டு பற்களை நசுக்கி அதை ஒரு கப் தண்ணீரல் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அதோடு 2 சிட்டிகை அளவு இலவங்கப்பட்டை பொடியும் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம்.