பிரான்சில் இன்று செப்டம்பர் 29, வியாழக்கிழமை RATP ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, சில சேவைகள் தடைப்படுகிறது.
இல்-து-பிரான்சுக்குள் பேருந்து சேவைகளில் மூன்றில் ஒரு சேவைகள் இன்று தடைப்படும்.
ட்ராம் சேவைகளில் T3a சேவை Pont du Garigliano மற்றும் Porte d’Ivry நிலையங்களுக்கிடையே மட்டுமே இயங்கும். ட்ராம் சேவைகளில் பத்தில் ஒரு சேவை மட்டுமே தடைப்படும் எனவும், ஏனைய சேவைகள் வழமை போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RER A சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும், RER B சேவைகள் நான்கில் மூன்று இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gare du Nord நிலையத்தில் உள்ள இணைப்பு சேவைகளும் (l’interconnexion) தடையில்லாமல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெற்றோக்களில் 6 ஆம் 8 ஆம் இலக்க மெற்றோக்கள் பத்தில் ஒரு சேவை மட்டும் தடைப்படும் எனவும், ஏனைய சேவைகள் வழமைபோல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்