நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31.67 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 58 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 60,975 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,67,323 ஆக உயர்ந்தது.
* புதிதாக 848 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 58,390ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 66,549 பேர் குணமடைந்துள்ளனர்; இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 24,04,585 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,04,348 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து இதுவரை 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 520 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
மும்பை : சிகிச்சை பெறுவோர் :168443 ; குணமடைந்தோர் : 502490; இறப்பு : 22465
தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :53282; குணமடைந்தோர் :325456; இறப்பு : 6614
டெல்லி : சிகிச்சை பெறுவோர் :11778 ; குணமடைந்தோர் :145388; இறப்பு : 4300
கேரளா : சிகிச்சை பெறுவோர் :20387 ; குணமடைந்தோர் :38883; இறப்பு : 234
கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :81230 ; குணமடைந்தோர் :197625; இறப்பு : 4810
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :89516 ; குணமடைந்தோர் : 268828; இறப்பு:3348