ஜப்பானின் பாபா வாங்கா யார்?
ரியோ டாட்சுகி என்ற முன்னாள் மங்கா கலைஞர், இன்று ஒரு எதிர்காலத் தீர்க்கதரிசியாகவே உலகமெங்கும் பேசப்படுகிறார். 1980களிலிருந்து அவர் கனவுகள் மூலமாக எதிர்காலத்தை காணும் திறனுடன், அவற்றை தனது நாட்குறிப்புகளில் பதிவு செய்து வந்துள்ளார்.

1999ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Future I Saw” என்ற மங்கா புத்தகம், பல உண்மையான நிகழ்வுகளைக் கணித்ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முந்தைய அதிர்ச்சி கணிப்புகள்
1991: ஃப்ரெடி மெர்குரி உடல் நலக் கோளாறால் இறப்பதை முன்கூட்டியே கனவில் கண்டதாக பதிவு.
1995: ஜப்பானில் கோபி பூகம்பம் (6,000 பேர் உயிரிழந்தது) – கனவில் கண்டதை ஒத்த நிகழ்வு.
2011: மார்ச் மாதத்தில் பேரழிவு ஏற்படும் என கணித்தார். அதே மாதம் டோஹோகு பூகம்பம் மற்றும் ஃபுகுஷிமா அணுசக்தி விபத்து நடைபெற்றது.
1992: “டயானா இறந்துவிட்டாரா?” என்றக் கனவு; 1997இல் இளவரசி டயானா பரிதாபமான முறையில் உயிரிழந்தார்.
ஜூலை 2025 – புதிய கணிப்பு என்ன?
டாட்சுகி தனது சமீபத்திய கனவில் ஜப்பானின் தெற்குப் பகுதியில் கடல் கொதிக்கும் காட்சியையும், வளர்ந்து வரும் காற்றுப் புள்ளிகளையும் கண்டதாக கூறுகிறார். இது ஒரு நீருக்கடியில் உள்ள எரிமலை வெடிப்பு, அதனுடன் மெகா-சுனாமி ஏற்படும் சாத்தியத்தை குறிக்கிறது.
அவர் கூறுவதன்படி, இது 2011 பேரழிவை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் கடலோரங்கள் ஆபத்தில் ஆழ்கின்றன என்றும் எச்சரிக்கிறார்.
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
தற்போதைக்கு, இதுபோன்ற சுனாமிக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், ஜப்பான் பசிபிக் நெருப்பு வளையத்தில் இருப்பதால், எப்போதும் இந்த இடத்தில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படும் அபாயம் அதிகம்.புவியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல, நங்காய் பள்ளத்தாக்கு பகுதியில் 30 மீட்டருக்கும் அதிகமான சுனாமி உருவாகக்கூடும்.
ரியோ டாட்சுகியின் கணிப்புகள் உண்மையாக முடியுமா என்பது நேரமே தீர்மானிக்கும். ஆனால், கடந்த நிகழ்வுகளை வைத்து மக்கள் அவரது கனவுகளைப் பெரிதும் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். ஜூலை 2025க்கான எதிர்பார்ப்பு மற்றும் அச்சம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.