யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (29.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதேவேளை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பதற்றமான நிலைமை
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்