
வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடும். அந்த வகையில் இந்து பஞ்சாங்கத்தின் படி மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வன், கல்வி, குழந்தை பாக்கியம் மற்றும் செழிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் கடந்த மே 1 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
பொதுவாக குரு பெயர்ச்சி வருடம் ஒருமுறை நடைப்பெறும். அந்த சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் பயணித்து வரும் குரு கிரகம் அடுத்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே, தற்போது இருக்கூடிய 270 நாட்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் மிகவும் லாபகரமான பல கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12ம் இடத்தில், அதாவது மேஷ ராசியில் இருந்தார் குரு. இப்போது ஜென்ம இடத்தில் குருவாக மாறி உள்ளது. இந்த குரு உங்கள் வீட்டில் உள்ளது உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே சரியான முறையில் பட்ஜெட்டை திட்டமிடவும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம், அல்லது புதிய தொழிலை தொடங்கலாம். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
சிம்மம்:
உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் குரு பயணிக்கிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும். தொழிலில் வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெறலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் இதுவரை இருந்து பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக முடிவுக்கு வரும். நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு. வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.
கன்னி :
இருந்த குரு 9ல் பயணித்து வருகிறார். உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டு இருப்பதால் உங்களுக்கு பொருளாதாரம் உயரும். கன்னி ராசிக்காரர்களுக்கு இனி நன்மை உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வு பெறலாம். பல முக்கியமான பணிகளை முடிப்பீர்கள். சுபிட்சம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.