பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த இளம் யுவதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு Vaires-sur-Marne நகரின் rue des Pêcheurs வீதியிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் படுக்கை அறை ஒன்றில் 19 வயதுடைய இளம் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது. உலங்குவானூர்தியில் வந்த மீட்புக்குழு குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
குறித்த இளம் பெண்ணின் உடலில் 15 வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், சமையலறை கத்தி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
13 செ.மீ நீளம் கொண்ட கத்தியால் யுவதி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான யுவதி இலங்கையைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.