பாடசாலை ஒன்றின் முன்பாக இடம்பெற்ற குழு மோதல் ஒன்றைத் தொடர்ந்து, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Champigny sur Marne (Val-de-Marne) நகரில் உள்ள Langevin-Wallon உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக, வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு இந்த மோதல் வெடித்துள்ளது. 20 பேர் கொண்ட குழு ஒன்று இரு தரப்பாக பிரிந்து மோதலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
மோதலில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், காயமடைந்த இருவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இருவரும் சுத்தியலால் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் Paul d’Égine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி மோதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.