FIFA World Cup 2022: கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ, கனவு கலைந்தது… சோகத்தில் ரசிகர்கள் – அரையிறுதியில் யார் யார்?

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

FIFA World Cup 2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. காலிறுதிப் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெற்றது. காலிறுதியில், பிரேசில் – குரேஷியா, நெதர்லாந்து – அர்ஜென்டீனா, போர்ச்சுகல் – மொராக்கோ, இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் மோதின.

இதில், குரேஷியா, அர்ஜென்டீனா, மொராக்கோ, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேற, மற்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

- Advertisement -

இதில், பிரேசில், போர்ச்சுகல் அணிகள் தோல்வியுற்று வெளியேறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரேஷியாவிடம் பிரேசில் அணி நேற்று முன்தினம் போராடி தோல்வியடைந்தது.

- Advertisement -

வலிமையான அணியாகவும், உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கணிக்கப்பட்ட பிரசில் காலிறுதியோடு வெளியேறியது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை கவலைக்குள்ளாகியது.

FIFA World Cup 2022 : கனவு கலைந்தது... கண்ணீர்விட்டு கதறிய ரொனால்டோ; சோகத்தில் ரசிகர்கள் - அரையிறுதியில் யார் யார்?
FIFA World Cup 2022 : கனவு கலைந்தது… கண்ணீர்விட்டு கதறிய ரொனால்டோ; சோகத்தில் ரசிகர்கள் – அரையிறுதியில் யார் யார்?

இதையடுத்து, மற்றொரு அதிர்ச்சியாக நேற்றைய போட்டியில், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, 0-1 என்ற கணக்கில் மொராக்கோவிடம் வீழந்தது. ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பையாக இத்தொடர், பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதிக்கு கூட தகுதிபெறமால் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்றொரு புறம், போர்ச்சுகலை வீழ்த்தி, 96 வருட பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில், அரையிறுதிக்குள் நுழைந்த முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.

- Advertisement -

தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறிய சோகத்தில் ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது, அனைவரின் மனதையும் உருகச்செய்தது. கால்பந்து கால்பதிக்காத இடங்களில் கூட ரொனால்டோவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், நேற்றைய தோல்வி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மைதானத்திலும், மைதானத்தை விட்டு செல்லும் வழியிலும் அவர் கண்ணீர்விட்டு அழும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தை நிரப்பிவருகின்றன.

FIFA World Cup 2022 : கனவு கலைந்தது... கண்ணீர்விட்டு கதறிய ரொனால்டோ; சோகத்தில் ரசிகர்கள் - அரையிறுதியில் யார் யார்?
FIFA World Cup 2022 : கனவு கலைந்தது… கண்ணீர்விட்டு கதறிய ரொனால்டோ; சோகத்தில் ரசிகர்கள் – அரையிறுதியில் யார் யார்?

இதையடுத்து, அவர் தேசிய அணிக்காக விளையாடுவாரா என்பது அவரின் கையில்தான் உள்ளது. ஆனால், சமீபத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய அவர், புதிய கிளப் அணியில் சேர இருக்கிறார் என்றும், சவுதி அரேபிய கிளப் அணி ஒன்றில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. இன்று நள்ளிரவு நடைபெற்ற இங்கிலாந்து – பிரான்சு போட்டியில், பிரான்சு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது நினைவுக்கூரத்தக்கது.

அரையிறுதியில், குரேஷியா – அர்ஜென்டீனா, மொராக்கோ – பிரான்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி வரும் 14ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரையிறுதியில், குரேஷியா, அர்ஜென்டீனா அணிகளும், 15ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் அரையிறுதியில் மொராக்கோ – பிரான்ஸ் அணிகளும் விளையாடுகின்றன. அதன்பிறகு டிச. 17ஆம் தேதி மூன்றாம் இடத்திற்கான போட்டியும், டிச. 18ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த அதிர்ச்சி

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு...

பிரான்சில் புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம்! அவதானம்!!

புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும்...

பாட்டியுடன் டூயட் ஆடிய கோபிநாத்… சிரிப்பை அடக்கமுடியாமல் அரங்கம் VIDEO

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் ட்ரெண்டி தாத்தா, பாட்டிகள்...

அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி! வெளியான அறிவிப்பு

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும்...

நடிகர் மனோபாலா திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.தமிழ்...

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார...

யாழ்ப்பாணம் விபத்தில் இளம் பெண்கள் இருவரை பலியெடுத்த கோரம்! உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link