ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், அழகு மற்றும் அன்பின் கடவுளாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் ஸ்தானம் சரியாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கும், மகிழ்ச்சிக்கும் எந்த குறையும் இருக்காது. சுக்கிரனின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அக்டோபர் 13 அன்று, சுக்கிரன் ராசியை மாற்றிக் கொள்கிறார். இந்த பெயர்ச்சி வைசியதசமி நாளில் நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் இதுவரை வாழ்க்கையில் காணாத செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் அவர்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரப் பெயர்சி அதிர்ஷ்டமான நேரத்தைக் கொண்டுவரப்போகிறது. இந்த ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் செய்த முதலீடு இப்போது லாபத்தை வழங்கும். வாழ்வில் இன்பங்களும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
கன்னி
சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள். வேலையை மாற்ற விரும்புவோருக்கு, தற்போது இருப்பதை விட சிறந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கும் இந்த காலகட்டம் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் நேரமாகும். வேலையில் டார்க்கெட்களை அடைவதிலும், வேலையைச் சரியாகச் செய்வதிலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் மிகப்பெரிய ஆதாயத்தை அடையப்போகிறார்கள். பண நெருக்கடிகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நன்மை தரும். உங்களின் கடன் சுமை குறைவதுமின்றி, செல்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக சம்பாதிக்கலாம், செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பையும் அதிகரிக்கலாம். அதேசமயம் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையிலும், மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.