கனடா
கனேடியர்கள் யாரெல்லாம் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை போடக்கூடாது! வெளியான முக்கிய தகவல்
ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது என்பது குறித்து கனடாவின் தேசிய ஆலோசனைக்கு குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.கனடாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களுக்கு ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா-வின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிந்துரைக்கவில்லை என்று நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) தெரிவித்துள்ளது.இந்த நேரத்தில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்களால் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு…
ஜூலை மாதம் வரை இதற்கு தடை! கனடாவின் மிகப்பெரிய நகர அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அரசு அறிவித்துள்ளது.ஜூலை மாதம் வரை அதாவது அடுத்த நான்கு மாதங்களுக்கு மேல் டொராண்டோ நகரில் வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா தின அணிவகுப்புகள், திருவிழாக்கள் மற்றும் வானவேடிக்கைகள் உட்பட நகரத்தின் தலைமையிலான மற்றும் நகரம் அனுமதித்த முக்கிய வெளிப்புற நிகழ்வுகள் ஜூலை 1ம் திகதி வரை ரத்து செய்யப்படுகிறது.நகர அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வெளிப்புற தளங்களில்…
இந்தியாவில் அரசியல் பிரமுகர் கொலை… கனடாவில் தீடப்பட்ட சதித்திட்டம்: பொலிசார் தகவல்
இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.கடந்த வியாழனன்று (18.2.2021), அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர், தனது வீட்டுக்கருகே சுடப்பட்டார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக Gurvinder Pal, Sukhwinder Singh மற்றும் Saurabh Verma என்னும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த கைது சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்த பொலிசார்,…
அமெரிக்க எல்லைகளில் கொரோனா சோதனையை தொடங்கும் கனடா; விதிகளை மீறினால் 750,000 டொலர் அபராதம்!
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் COVID-19 ஸ்வாப் சோதனைகளை கனடா இன்று முதல் தொடங்குகிறது.கனடாவின் Public Health Agency 117-க்கும் மேற்பட்ட அமெரிக்க-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்தது.கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எதிர்மறை COVID-19 PCR சோதனை முடிவுகளுக்கு விலக்கு அளித்து, அமெரிக்க நுழைவுத் துறைமுகத்தில் COVID-19 சோதனையை நிர்வகிப்பதாக கனடா…
கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியர்: பல்வேறு தரப்பினர் புகழாரம்
கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியருக்கு தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை புகழாரம் செலுத்திவருகின்றனர்.கனடாவின் North Battleford பகுதியில் செவிலியராக பணி புரிந்தவர், கேரளாவைச் சேர்ந்த டாம் தாமஸ் (34).மருத்துவமனையில் பணிபுரிந்த தாமஸுக்கு கொரோனா தொற்றியதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.தாமஸுக்கு மெரின் ஜார்ஜ் என்ற மனைவியும், 18 மாத பெண்…
வேறு நாட்டில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து கோடீஸ்வரர் ஆன நபர் மரணம்! அர்ப்பணிப்பான மனிதர் என புகழஞ்சலி
கனடாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஆண்ட்ரீஸ் அபோஸ்டோலோபவுலஸ் தனது 69வது வயதில் காலமானார்.கிரீஸ் நாட்டில் பிறந்த ஆண்ட்ரீஸ் தனது டீன் ஏஜ் பருவத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.கனடாவில் தொழிலாளியாக பணியை தொடங்கிய அவர் பின்னர் துப்புரவு நிறுவனம் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பை உற்பத்தி வணிகத்தை செய்தார்.இதன்பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். தனது திறமையாலும், கடினமான உழைப்பாலும் ஆண்ட்ரீஸ் பெரும் கோடீஸ்வரராக ஆனார். அவரின் சொத்து மதிப்பு $4 பில்லியன் என்ற அளவுக்கு ஆனது.இந்த நிலையில் ஆண்ட்ரீஸ்…
கனடா – அமெரிக்கா இடையிலான பயணத் தடை மீண்டும் நீட்டிப்பு!
கோவிட்-19 தொற்றுநோயால் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை இப்போது மார்ச் 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை பிப்ரவரி 21-ஆம் திகதி வரை அறிவித்திருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக இப்பொது மேலும் ஒரு மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்படி 11-வது முறை தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமேரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற…
இப்போது நான் கோடீஸ்வரன்! கனடாவில் தந்தை ஒருவருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்… மகிழ்ச்சியுடன் விவரித்த தருணம்
கனடாவில் நபர் ஒருவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.Orangeville-வை சேர்ந்தவர் ஜூலி தாப்சங். இவருக்கு தான் லொட்டோ 6/49ல் பரிசு விழுந்துள்ளது.இது குறித்து அவர் கூறுகையில், முதலில் எனக்கு லொட்டரியில் $50,000 பரிசு விழுந்ததாகவே நினைத்தேன்.பின்னர் தான் $1 மில்லியன் பரிசு விழுந்ததாக தெரியவந்தது.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என் வாழ்கை மாறவுள்ளது, இப்போது நான் கோடீஸ்வரன்.பரிசு பணத்தை வைத்து முதலில் என் அடமான கடன்களை அடைக்கவுள்ளேன்.மீதி பணத்தை என் குழந்தைகளுடன்…
கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிப்பு! பொலிசார் தகவல்… வெளியான புகைப்படம்
கனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.ராஜதுரை கஜேந்திரன் என்ற 56 வயது நபர் கடந்த 14ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காணாமல் போனார்.அவர் கடைசியாக Kennedy Rd & Eglinton Ave E பகுதியில் காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.ராஜதுரையின் உயரம் 5 அடி 9 அங்குலம் என பொலிசார் தெரிவித்ததோடு, அவர் குறித்த சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டார்கள்.இந்தநிலையில் ராஜதுரை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார்…
இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவருக்கு டைம் பத்திரிகை அளித்துள்ள கௌரவம்!
2021ஆம் ஆண்டின், டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.இலங்கை உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய மனக்காயங்களால், தன்னை தமிழ் கனேடியர் என அழைக்க விரும்பும் ஒன்ராறியோவைச் சேர்ந்த மைத்ரேயி இராமகிருஷ்ணன்தான் அந்த கௌரவத்தைப் பெற்றுள்ளவர்.Never Have I Ever என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார் மைத்ரேயி.நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த தொடரில் நடிக்கும் மைத்ரேயி, ஒரு முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க…
கனடாவில் புதிய சிக்கல்! உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு: கவலையில் நிபுணர்கள்
கனடாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், உருமாறிய வைரஸ் பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் இதுவரை 830,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளும், 21,500க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.கடந்த ஜனவரியில் ஒவ்வொரு நாளும் 8,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த 7 நாட்களாக ஒரு நாளைக்கு 3,000-க்கும் குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகி வருகின்றன.இந்நிலையில், நாட்டில் இப்போது மொத்தமாகவே 35,700 பாதிப்புகள் செயலில் உள்ளதாக கனடாவின் Public Health Agency தெரிவித்துள்ளது.பாதிப்புகள் குறைந்து…
கனடாவில் மாயமான தமிழர்! அவர் கடைசியாக காணப்பட்ட இடம் எது? புகைப்படத்துடன் பொலிசார் முக்கிய தகவல்
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.ரொறன்ரோ பொலிசார் இத்தகவலை தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.அதன்படி ராஜதுரை கஜேந்திரன் என்ற 56 வயது நபர் கடந்த 14ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காணாமல் போயிருக்கிறார்.அவர் கடைசியாக Kennedy Rd & Eglinton Ave E பகுதியில் காணப்பட்டுள்ளார்.ராஜதுரையின் உயரம் 5 அடி 9 அங்குலம் என பொலிசார் தெரிவித்துள்ளதோடு, அவர் குறித்த சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டுள்ளனர்.காணாமல் போன…