உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிகொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றி சுற்றி ஏன் வருகிறது???
வீட்டிற்க்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..??
சாலையோர கடையிலோ தள்ளு வண்டிகடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லை தவிற வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..????
#குறிஞ்சி , #முல்லை என நகர்ந்து #மருதநிலத்திற்க்கு மனிதகுலம் இடம்பெயருகிறது.மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்குகி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்திசெய்கிறது.
குகையில் வாழ்ந்து பழகியவன் வீடுகட்டி வாழ பழகுகிறான்.சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது.காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை,அறிவியல்,குற்ற வழர்ச்சியில் உச்சத்தை எட்டிவிட்டான்.
“#நாய்களுக்கும்_இதற்க்கும்_என்ன_சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும்போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படகூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகலான #ஆடு,#மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.
அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”. மனிதன் social animal ( சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது.
உங்களோடு அதற்கு பேச மட்டும் தான்தெரியாது. உங்கள் மொழியை புரிந்து கொள்ளும்,.நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்,.உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என தெரியும்,…. உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்ட தெரியும்.உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சினுங்கத்தெரியும்.
உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பி தாக்காமல் விளையாட்டு காட்ட தெரியும்.உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டுவாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்றுவிட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.
வெளியூருக்கு போய் வந்த நம் அப்பா வை பார்ததும் முன்னங்கால்களை தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும்.வாலை ஆட்டிக்கொண்டு மளிகை கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும்.
உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?..ஒரு கை பார்த்துவிடும்.இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.
ஆயிரம் வெளிநாட்டு நாய்கள் இருப்பினும் நம் #நாட்டுநாய்களுக்கு ஈடாகுமா???
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்