அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொய்த்தி தொடங்கியது. சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகிறார்கள்.
இன்றைய மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியத்தான்:
பா.ஜ.க.வினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் கவுரவர்கள் போல அதிகாரத்துக்காக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். ஆனால், நாங்கள் பாண்டவர்கள் போல உண்மைக்காக போராடி வருகிறோம். பா.ஜ.க. என்பது ஒரு அமைப்புக்கு மட்டுமே குரல் தருகிறது. ஆனால், தேசத்துக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது.
அழகிய தமிழ் மொழி சிதைக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. தமிழக மக்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது; அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு தமிழக மக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
கேபார் சிங் வரி முதல் யோகா வரை பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்துகொண்டாலும், பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறப்பதில்லை. நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் இருந்து பிரதமர் மோடி கவனத்தை திசை திருப்பி வருகிறார்.
இந்தியாவில் வளர்ந்து வரும் நாடாக உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது.
தலைவர்களுக்கும் தொண்டருக்கும் இடையில் பெரிய சுவர் உள்ளது. என் முதல் வேலை அந்த சுவரை அகற்ற வேண்டும். இதுகுறித்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பேசுவள்ளேன்.
பா.ஜ.க.வில் மட்டும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைவராக இருந்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் அப்படி யாரும் தலைவராக இல்லை. இந்திய வங்கிகளில் இருந்து 33 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தவர்கள் மத்தியில் பாஜக அரசு பாதுகாத்து வருகிறது. காரணம், முதலாளித்துவ நிறுவனங்களில் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகள் பணி செய்து வருவதால், அவரும் மவுனம் காத்து வருகிறார். கொள்ளையடிப்பவர்களை பா.ஜ.க. அரசு காப்பாற்றி வருகிறது. பணக்காரர்களின் பாதுகாவலராக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.