Plasmodium ovale என்னும் மலேரியாவின் புதிய ஜீனஸ் வகை பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை, சமூகநீதி, பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கன்னூர் மாவட்ட மருத்துவமனையில், ராணுவ வீரருக்கு சிகிச்சையளிக்கும்போது, அவருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், அவர் சூடானில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. தடுப்பு முறையின் மூலமாகவும், சரியான நேரத்திலான சிகிச்சையிலும் இந்த நோய் பரவல் தடுக்கக்கூடியதே என அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இந்த ப்ளாஸ்மோடியம் ஒவேல், என்னும் இந்த இன வகை ப்ரோடோஜோவா, மலேரியா நோய் தாக்கத்துக்கு காரணமான ஒன்று. ப்ளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் மற்றும் ப்ளாஸ்மோடியம் விவாக்ஸ் ப்ரோட்டோஜோவா போல ப்ளாஸ்மோடியம் ஒவேலும் உள்ளது. பாதிக்கப்படும் நபர் 20 நாட்களுக்குள்ளாக நோய் வாய்ப்படும் வாய்ப்புள்ளது.
கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 59, 517 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,533 பேர் இறந்துள்ளனர். 5,91,845 பேர் குணமடைந்துள்ளனர்
Plasmodium ovale, a new genus of malaria, has been detected in the State. It was found in a soldier who was being treated at the District hospital in Kannur. The soldier had come from Sudan. The spread of the disease can be avoided with timely treatment and preventive measures.
— Shailaja Teacher (@shailajateacher) December 10, 2020